• July 9, 2025
  • NewsEditor
  • 0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மூளையில் சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்னர், அதிமுக ஆட்சி ஊழல் புதை சேற்றில் மூழ்கி, பாஜக மத்திய அரசின் கொட்டடியில் அடைக்கப்பட்ட அடிமையாக இருந்தபோது, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முன்வைத்த ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை இன்று காலப் பொருத்தம் இல்லாமல் முழங்கி வருகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *