
திருப்பூர்: திருப்பூரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகை வீடுகளில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமாகின.
திருப்பூர் கல்லூரி சாலை சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள எம்ஜிஆர் காலனியில் தாராதேவி (50) என்பவருக்குச் சொந்தமான இடத்தில், 42 தகரக் கொட்டகைகள் அமைத்து, தொழிலாளர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி, திருப்பூரில் கட்டிட வேலை மற்றும் பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.