• July 9, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று தொழிசங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டதாலும், கடைகள் திறக்கப்பட்டதாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் விருதுநகரில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2,312 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோதப் போக்கு மற்றும் தேசவிரோத கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. அதையடுத்து, 10 மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு நாடு தழுவிய பொது வேலை நிறத்தப் போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *