• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மக்களின் மீது அனைத்து வரிகளையும் சுமத்தி, ஆண்டொன்றுக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் வருமானத்தை ஈட்டும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் 2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.12,500 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *