• July 9, 2025
  • NewsEditor
  • 0

சனா: கேரளாவின் பாலாக்காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்டுவிட ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’ (Save Nimisha Priya Council) என்ற அமைப்பு இறுதி முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

‘இது எங்கள் இறுதி முயற்சி’ – ஏமன் நாட்டைச் சேர்ந்தவரான தலால் அப்டோ மஹ்தி என்பவரை நிமிஷா பிரியா கொலை செய்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. தலால் மஹ்தியின் வெட்டப்பட்ட உடல் 2017-ம் ஆண்டு தண்ணீர் தேக்கும் மேல்நிலைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனை நிறைவேற்றும் துறை சிறை அதிகாரிகளுக்கு ஜூலை 16 மரண தண்டனையை நிறைவேற்றிக் கொள்ள அனுமதியளித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *