
பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அந்நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அல்வோரடா மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு நல்கப்பட்டது. 144 குதிரைகள் அணிவகுக்க, இந்திய இசையுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடவே பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனத்தையும் அந்நாட்டுக் கலைஞர்கள் ஆடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.