
புதுடெல்லி: மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நடைபெறும் பாரத் பந்த் காரணமாக கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பரவலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது, வங்கிகள், தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.