• July 9, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்​டயக் கணக்​காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்​தரங்க வீடியோக்களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக மிரட்டி ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்​கள் கடந்த 18 மாதங்​களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலா​விடம் இருந்து பறித்​துள்​ளனர்.

இந்த நிலை​யில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்​கடி கொடுத்​ததையடுத்து அந்த பட்​டயக் கணக்​காளர் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ராஜ் லீலா​வுக்கு பங்​குச் சந்​தை​யில் அதிக முதலீடு​கள் மற்​றும் அதிக சம்​பளம் பெறு​வதை தெரிந்து கொண்டு திட்​ட​மிட்டு அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *