• July 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்​டும் தாய் மதம் திரும்​பும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் மீண்​டும் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பினர். இந்நிகழ்ச்சியை விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் நடத்​தியது. அப்​போது பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா என்​பவர் தங்​களை முஸ்​லிம் மதத்​துக்கு மாற்​றிய​தாக பலர் தெரி​வித்​தனர்.

ஏற்​கெனவே, மதம் மாற்ற புகாரில் ஜுங்​கூர் பாபா சிக்​கி, கடந்த நவம்​பர் 2024-ம் ஆண்டு தேடப்​பட்டு வந்​தவர். இதனால், உ.பி. அதிரடி படை (ஏடிஎஸ்) ஜுங்​கூர் உள்​ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்​தது. கோமதி நகர் நிகழ்ச்​சிக்கு மறு​நாள் ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நண்​பர்​கள் நீத்து நவீன் ரொஹரா (எ) நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் நடந்த விசா​ரணை​யில் பல அதிர்ச்சி தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *