• July 9, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத் அரு​கில், சங்​காரெட்டி மாவட்​டம் பாஷமைலாரம் பகு​தி​யில் கடந்த 40 ஆண்டு​களாக சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் தேதி ரியாக்​டர் டேங்க் திடீரென வெடித்​த​தில் 40 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் 33 பேர் படு​கா​யம் அடைந்தனர்.

இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தெலங்​கானா அரசு தலா ரூ.1 கோடி​யும், சிகாச்சி நிறு​வனம் தலா ரூ.1 கோடி​யும் நிவாரண​மாக அறி​வித்​தன. மேலும் காயமடைந்​தவர்​களுக்​கும் நிதி உதவி அறிவிக்​கப்​பட்​டது. இந்த கோர விபத்​தில் பலரது உடல்​கள் உருக்​குலைந்து போன​தால் டிஎன்ஏ பரிசோதனை​யில் அடை​யாளம் கண்டு உறவினர்​களிடம் உடல்​கள் ஒப்​படைக்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *