
கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடலூரில் உள்ள தனியார் பள்ளி வேன் நேற்று காலை தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) வேனை ஓட்டிச் சென்றார்.
காலை 7.30 மணி அளவில் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்புரம்-மயிலாடு துறை பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேன் சுக்குநூறாக நொறுங்கி, 50 அடி வரை இழுத்துச் செல்லப்பட்டது.