
விழுப்புரம்: பாமக சார்பில் தேர்தல் படிவங்களில் இனி நான்தான் கையொப்பமிடுவேன் என கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் நேற்று நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநிலப் பொதுச் செயலாளர் முரளி சங்கர், பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கூட்டணி தொடர்பான அதிகாரம் எனக்குத் தரப்பட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் வழங்கப்படும் ‘ஏ’, ‘பி’ படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன்.