
சென்னை: தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை மாநில ஆளுநருக்கு அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 151(2)- வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்படி, 2023-24 நிதி ஆண்டுக்கான தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் மாநில நிதி தணிக்கை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக முதன்மை தலைமை கணக்காளர் டி. ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.