
சென்னை: தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று திட்டம் குறித்து விளக்கி, விண்ணப்பங்களை வழங்கினர்.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற, ஊரக பகுதிகளிலும் ஜூலை 15-ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.