• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, தமிழ்​நாடு மின்​வாரிய அப்​ரண்​டீஸ் தொழிற்​சங்​கம் சார்​பில், கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, தொழிற்​சங்​கத்​தின் தலை​வர் டி.மகேந்​திரன் தலைமை வகித்​தார். ஆர்ப்​பாட்​டம் குறித்​து, செய்​தி​யாளர்​களிடம் பொதுச்​செய​லா​ளர் நந்​தகு​மார் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் கள ஊழியர்​களுக்​கான 32 ஆயிரம் காலிப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் உள்​ளன. இதையொட்​டி, மின்​வாரி​யத்​தில் பயிற்சி முடித்த டிப்​ளமோ மற்​றும் பி.இ. மாணவர்​களுக்கு டிஎன்​பிஎஸ்சி மூல​மாக​வும், ஐடிஐ முடித்​தவர்​களுக்கு மின்​வாரி​யம் மூல​மாக​வும் தேர்​வு​கள் நடத்​தவுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. யார் தேர்வு நடத்​தி​னாலும் சரி, மின்​வாரி​யத்​தில் பயிற்சி முடித்​தவர்​களுக்கு இட ஒதுக்​கீடு வழங்​கப்பட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *