• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சி, வட சென்னை பகு​தி​யில், தேசிய நகர்ப்​புற வாழ்​வா​தார திட்​டத்​தின் கீழ் பணிபுரி​யும் சுமார் 2 ஆயிரம் தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களின் வாழ்வாதாரத்தை பாதிக்​கும் வகை​யில் திமுக அரசும், சென்னை மாநக​ராட்​சி​யும், தனி​யார் நிறு​வனம் ஒன்​றுக்கு தூய்​மைப் பணியை மேற்​கொள்​வதற்​கான ஒப்​பந்த ஆணையை வழங்கி உள்​ளது.

இதனால், அப்​போதைய திமுக ஆட்​சி​யில், சென்னை மாநக​ராட்​சி​யில் 2007-ம் ஆண்டு முதல் பணி​யமர்த்​தப்​பட்ட தூய்​மைப் பணியாளர்​களின் வேலை கேள்விக் குறி​யாகி உள்​ளது. மேலும், வடசென்​னை​யில் உள்ள மண்​டலங்​களில் பணிபுரி​யும் 2 ஆயிரம் பேரும், தண்​டை​யார்​பேட்டை மண்​டலத்​தில் வசித்து வரு​வ​தாக தெரி​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *