• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோயில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் இதுகுறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று (ஜூலை 8) இரண்டாவது நாளாக கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியபோது, “கோயிலைக் கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் எல்லாம் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அது அறநிலையத் துறைக்கு போய் சேர்கிறது. கோயிலை அபிவிருத்தி செய்து, விரிவுப்படுத்துவதற்குத்தான் நீங்கள் பணம் போடுகிறீர்கள். ஆனால் அந்த பணத்தை எடுத்துக் கல்லூரி கட்டுகிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *