
சென்னை: கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.