
மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாளை (ஜூலை 9) நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
தனியார்மயமாக்கல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பொருளாதார மற்றும் தொழிலாளர் நல சட்டங்களை மாற்றியமைத்தல் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவற்றை கண்டித்து நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மற்றும் பல்வேறு முன்னணி பொதுத்துறை வங்கிகளின் தொழிலாளர் கூட்டமைப்புகள் ஜூலை 9-ல் நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.