
புதுடெல்லி: “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?" என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த 4 நாள் போரை நிறுத்தியது நான்தான். அந்தப் போர் அணு ஆயுத மோதலாக அதிகரிக்க இருந்தது.