
ஹாய்! எப்படி இருக்கீங்க!
“நிறைய பணம் வைத்திருப்பது முக்கியமல்ல. நாம் நினைத்தபடி சுதந்திரமாக வாழ்வதே முக்கியம்!”
– யுவர் மணி ஆர் யுவர் லைஃப் புத்தகத்தில் இருந்து
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இதயத்தோடு கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் வணக்கங்கள்!
படிப்புக்காக, வேலைக்காக, பிடித்ததை செய்ய வேண்டும் என்ற முனைப்புக்காக நீங்க வெளிநாட்டில் வசித்து வர்றீங்க. உங்கள்ல பல பேருக்கு, முடிஞ்சளவு பொருளை ஈட்டி, திரும்பவும் சொந்த ஊருக்கு திரும்பும் கனவு இருக்கும். வாழ்க்கையில் நல்லா சம்பாதிச்சு நிறைய சொத்துக்களுடன் நிம்மதியாக செட்டில் ஆகணும்ங்கிற ஆசை இருக்கும்.
ஆனால் அதையெல்லாம் நிறைவேற்றுவது எப்படி?
இந்தியாவைவிட வளர்ந்த நாடுகளில் வேலை பார்க்கும்போது, நம்முடைய சம்பளம் அதிகமா இருக்கும். இந்தியாவை ஒப்பிடும்போது, வளைகுடா நாடுகளில் எல்லாம் வரியும் அதிகமா கிடையாது. எனவே, நம் சம்பாத்தியம் அதிகம், அதனால நாம ஓய்வுபெறும் வயதும் 60 வயது வரை இருக்க வேண்டியதில்லை. நீங்க சரியா திட்டமிட்டா 40+ வயதுகளில் கூட ரிட்டையர் ஆக வாய்ப்பிருக்கு!
நீங்க சீக்கிரமா ரிட்டையர் ஆகி, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழணுமா? உலகத்தைச் சுற்றிப் பார்க்கணுமா? விவசாயம் பண்ணனுமா? படம் எடுக்கணுமா? இல்ல அமைதியா உங்க ஊருல போய் வாழணுமா? உங்களுடைய ஆசை எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு நீங்க கைநிறைய சம்பாதிக்கும்போதே பிளான் பண்ணனும்!

இயர்லி ரிட்டைர்மென்ட் பெறுவது எப்படி? – வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
* நீங்க வெளி நாட்டில் வாழும்/வேலை பார்க்கும் இந்தியரா?
* வயசு 30-45-க்குள்ளயா?
* சீக்கிரமா ரிட்டையர் ஆகி, உங்க மனசுக்கு பிடிச்ச வேலைகளில் நீங்க ஈடுபடணுமா?
* வெளிநாட்டில் வேலை முடிந்து இந்தியா திரும்பும்போது, இங்கே உங்களுக்குத் தேவையான சொத்துகள் தயாரா இருக்கணுமா?
* வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்வது எப்படின்னு தெரியனுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்க ‘ஆமாம்’னு சொன்னா… விகடன் ‘லாபம்’ வழங்கும் வெபினாரில் கலந்துக்க மறக்காதீங்க! ‘இல்லை’னா… உங்க நண்பர்/உறவினர் வெளிநாட்டில் இருந்தா, அவங்கள பங்கேற்க வைங்க!

தலைப்பு: Early Retirement பெறுவது எப்படி? NRI சிறப்பு வெபினார்
நாள்: ஜூலை 12, 2025, சனி
நேரம்: இந்திய நேரம் மதியம் 12:30 – 2:00 மணி வரை
பேச்சாளர்: சிவகுமார், மேனேஜர், குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முன்பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 10, 2025.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/ouEStKg3oyeYmb4L9