
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசிகவில் தேர்தல் பணி என்பது எங்களது களப்பணிகளில் ஒன்று. அதுவே எங்களது முதன்மையான பணி அல்ல.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்புக்கான பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.