• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஈ​ரான் நாட்​டில் சிக்​கித் தவித்த தமிழக மீனவர்​கள் 15 பேர் மத்​திய வெளி​யுறவுத் துறையின் முயற்​சி​யால் மீட்​கப்​பட்டு சென்னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில் அவர்​களை வரவேற்ற தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அனைத்து செல​வு​களை​யும் தமிழக பாஜக ஏற்​றுள்​ள​தாக தெரி​வித்​தார். ஈ​ரானில் சிக்​கித் தவித்த தமிழகத்​தின் திருநெல்​வேலி மாவட்​டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்​கள், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தின் மூலம் மீட்​கப்​பட்​டனர்.

ஈரானிலிருந்து கப்​பலில் துபாய் வந்த அவர்​கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்​லிக்​கும் அங்​கிருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று முன்​தினம்சென்​னைக்​கும் வந்​தனர். சென்னை விமான நிலை​யத்​தில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மீனவர்​களை வரவேற்​றார். பின்​னர் பாஜக ஏற்​பாடு செய்த வாக​னங்​கள் மூலம், திருநெல்​வேலிமாவட்​டம் உவரிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *