• July 8, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும் போலீஸார் விசாரித்தனர்.

போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 2 பேர் கொடுத்த ஆதாரங்கள், மாநகராட்சி ஊழியர்கள் அளித்த தகவல்கள், சொத்துவரி மட்டுமல்லாது மேலும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் பொதுமக்கள் ரகசியமாக அனுப்பிய ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போலீஸார் அறிக்கை தயார் செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *