
மும்பை: ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம். அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி மருந்தியல் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்வேத, சித்த, ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம், அலோபதி மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.