
சென்னை: பொதுத்துறை வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, அபராதமாக தலா ரூ.15 லட்சத்தை சிபிஐ-க்கும் மாநில சமரச தீர்வு மையத்துக்கும் செலுத்த உத்தரவிட்டது.
வங்கியிடமிருந்து கடந்த 2013-ம் ஆண்டு வாங்கிய ரூ. 30 கோடி கடனை தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.