
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (ஜூலை 9) நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் முதல்வரும், தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.