
சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மற்றும் சென்னையில் இருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சிங்கப்பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 90-ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6), ‘ஃபேர்மோன்ட் சிங்கப்பூர்’ ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.