• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட தனி​யார் பள்​ளி​களின் தமிழாசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்​டம், 2006-ம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்​டது. இச்​சட்​டம், தமிழகத்​தில் உள்ள அனைத்​து​வகை பள்​ளி​களி​லும், தமிழ் மொழியை கட்​டாய பாட​மாகக் கற்​பிக்க வகை செய்​கிறது. இந்​நிலை​யில், தமிழ் கற்​றல் சட்​டத்தை முழு​மை​யாக நடை​முறைப்​படுத்​தும் வகை​யிலும், சிபிஎஸ்இ உள்​ளிட்ட இதர வாரி​யங்​களின் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​கள் தமிழை எளிமை​யாக​வும், விருப்​ப​மாக​வும் படிக்​க​வும் அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட பள்​ளி​களில் பணிபுரி​யும் 6 ஆயிரம் தமிழாசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் பயிற்சி அளிக்​கப்பட இருக்​கிறது.
அந்த வகை​யில், முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இந்த பயிற்சி முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *