
திருப்பூர்: இளம்பெண் ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு, அவிநாசியில் திங்கள்கிழமை மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா திருமணம் நடந்த 78 நாளில் கணவர் குடும்பத்தினரின் கொடுமை தாங்காமல் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தைக்கு அவர் அனுப்பிய வாட்ஸ் அப் ஆடியோ, சமூகத்தில் பலரையும் உலுக்கியது. இதுதொடர்பாக, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.