
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்தமுறையை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தி நிலுவையுடன் வழங்க வேண்டும்.