
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்ட நல்லதங்காள் கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அறநிலையத்துறை கோயிலை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.