
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி ரோடு ஷோ நடத்தும் அவர் பல்வேறு இடங்களில் மக்களிடம் பேசுகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ர காளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்துகிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பேருந்து நிறுத்தம், பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம், துடியலூர் ரவுண்டானா மற்றும் சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.