• July 7, 2025
  • NewsEditor
  • 0

கோவை: அ​தி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம், தமிழகத்​தை மீட்​போம்​’ என்​ற பிரச்​சா​ரத்​தை மேட்​டு​ப்​பாளை​​யத்​தில்​ இன்​று தொடங்​கு​கிறார்​. இதையொட்​டி ரோடு ஷோ நடத்​து​ம்​ அவர்​ பல்​வேறு இடங்​களில்​ மக்​களிடம்​ பேசுகிறார்​.

2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​முன்​னாள்​ ​முதல்​வரு​ம்​, அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ரு​மான பழனி​சாமி ‘மக்​களை ​காப்​போம்​, தமிழகத்​தை மீட்​போம்’ என்​ற பிரச்​சா​ரப்​ பயணத்​தை இன்​று தொடங்​கு​கிறார்​. ​காலை 9 மணி​க்​கு கோவை ​மாவட்​டம்​ மேட்​டு​ப்​பாளை​​யம்​ சட்​டப்​பேர​வைத்​ தொகு​தி​க்​கு உட்​பட்​ட தேக்​கம்​பட்​டி​யில்​ உள்​ள வனப​த்​ர ​காளி​​யம்​மன்​ கோயி​லில்​ சு​வாமி தரிசனம்​ செய்​து​விட்​டு, அங்​குள்​ள தனி​யார்​ ​திரு​மண மண்​டப​த்​தில்​ ​விவ​சா​யிகளு​டன்​ கலந்​துரை​யாடு​கிறார்​. ​மாலை 4.35 மணி​க்​கு மேட்​டு​ப்​பாளை​​யம்​- ஊட்​டி ​சாலை​யில்​ ​காந்​தி சிலை அரு​கே ரோடு ஷோ நடத்​துகிறார்​. தொடர்​ந்​து மேட்​டு​ப்​பாளை​​யம்​ பேருந்​து நிலை​யம்​, ​காரமடை பேருந்​து நிறுத்​தம்​, பெரிய​நாயக்​க​ன்​பாளை​​யம்​ பேருந்​து நிறுத்​தம்​, துடியலூர்​ ர​வுண்​டா​னா மற்​றும்​ சர​வணம்​பட்​டி பேருந்​து நிறுத்​தம்​ அரு​கே மக்​களிடம்​ பிரச்​சா​ரம்​ மேற்​கொள்​கிறார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *