
சென்னை: ஐசிஎஃப் ஆலையில் இந்த நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை ஐசிஎஃப்-ல் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அதிலும், தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது வரை 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.