• July 7, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல் கூறி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி​யில் கணவன் குடும்​பத்​தார் கொடுமை​யால் தற்​கொலை செய்​து​கொண்ட ரிதன்​யா​வின் வீட்​டுக்கு நேற்று சென்ற முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்​கவேல், ரிதன்​யா​வின் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எனக்​கும் ரிதன்​யா​வின் குடும்​பத்​துக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. ரிதன்யா கடைசி​யாக அவரது தந்​தைக்கு அனுப்​பிய ஆடியோவை கேட்ட பின்​பு​தான், அவர்​களுக்கு ஆறு​தல் கூற வேண்​டுமென தனிப்​பட்ட முறை​யில் நான் இங்கு வந்​துள்​ளேன். ரிதன்யா உயி​ரிழப்​புக்கு முன்பு அனுப்​பிய ஆடியோ மிக​வும் முக்​கிய​மான சாட்​சி​யாக உள்​ளது. ரிதன்யா தரப்பு வழக்​கறிஞரிடம் பேசினேன். முதல் தகவல் அறிக்​கை​யை​யும் படித்​தேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *