
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 40,500 கனஅடியாகவும், மாலை 50,500 கனஅடியாகவும் பதிவானது. அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடியாகவும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.