• July 7, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி ஆற்​றில் விநாடிக்கு 58,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 51,401 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 40,500 கனஅடி​யாக​வும், மாலை 50,500 கனஅடி​யாக​வும் பதி​வானது. அணைக்கு நீர்​வரத்து உயர்ந்​துள்ள நிலை​யில், அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 50,000 கனஅடி​யாக​வும், மாலை 5 மணிக்கு 58,000 கனஅடி​யாக​வும் அதி​கரிக்​கப்​பட்​டது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 120 அடி​யாக​வும், நீர் இருப்பு 93.47 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *