
சென்னை: ‘அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளுமன்ற தேர்தல்தான்’ என பூத் கமிட்டி கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக பூத் கமிட்டியை வலிமைப்படுத்துவது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.