
சென்னை: பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழதாயில் பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் (ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ்) பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சுமார் ஒரு மணி நேரமாக வெடித்துச் சிதறி உள்ளது. அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவிய நிலையில் அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறியுள்ளன.