
மும்பை: ‘நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை. பள்ளிகளில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்’ என சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அம்மாநில அரசு அறிவித்தது. அதில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த அறிவிப்பை ஆளும் பாஜக தலைமையிலான அரசு திரும்பப் பெற்றது.