
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.