
பாட்னா: பிஹாரில் தொழிலதிபரும் பாஜக நிர்வாகியுமான கோபால் கெம்கா அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிஹாரில் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் கோபால் கெம்கா. பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவருடைய வீடு பாட்னாவில் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெளியிலிருந்து வீடு திரும்பிய கெம்காவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் இப்போது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.