
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதை தொடர்ந்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.