• July 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு அதி​கரிப்பை கட்​டுப்​படுத்த 10 ஆண்​டு​கள் பழைய டீசல் மற்​றும் 15 ஆண்​டு​கள் பெட்​ரோல் வாக​னங்​களுக்கு பெட்​ரோல் பங்க்​கு​களில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்​தது.

இதற்கு பொது​மக்​களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலை​யில், அரசு உத்​தரவு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பழைய வாக​னங்​களுக்கு எப்​போது வேண்​டு​மா​னாலும் தடை வரலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையடுத்து தங்​களு​டைய பழைய வாக​னங்​களை டெல்​லி​வாசிகள் அவசர அவசர​மாக விற்​ப​தில் மும்​முர​மாக உள்​ளனர். ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்து வாங்​கிய மெர்​சிடஸ் உள்​ளிட்ட சொகுசு வாக​னங்​கள் வந்த விலைக்கு விற்​கும் நிலை உரு​வாகி உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *