
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்தது.
இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அரசு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வாகனங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தங்களுடைய பழைய வாகனங்களை டெல்லிவாசிகள் அவசர அவசரமாக விற்பதில் மும்முரமாக உள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய மெர்சிடஸ் உள்ளிட்ட சொகுசு வாகனங்கள் வந்த விலைக்கு விற்கும் நிலை உருவாகி உள்ளது.