• July 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற உள்ள 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நாளை (ஜூலை 7) கோவை மேட்​டுப்​பாளை​யத்​தில் ‘புரட்சி தமிழரின் எழுச்​சிப்பயணம் – மக்​களை காப்​போம் – தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார்.இதற்​கான இலட்​சினை மற்​றும் பாடலை, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜூலை 7-ம் தேதி (நாளை) கோவை​யில் இருந்து சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறேன். 234 தொகு​தி​களுக்​கும் செல்ல உள்​ளேன். எனது பயணத்​தின் நோக்​கம் திமுக ஆட்​சி​யின் கொடுமையை அம்​பலப்​படுத்தி மக்​களிடம் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வதுதான். திமுக ஆட்​சி​யில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்​கும் பாது​காப்பு இல்​லை. திமுக நிறைவேற்​றாத வாக்​குறு​தி​களை மக்​களிடம் எடுத்து கூற உள்​ளோம். ஸ்டா​லின் ஆட்​சி​யின் வேதனையை பட்​டியலிட்​டு, மக்​கள் விரோத ஆட்​சியை அகற்​று​வோம். இச்​சுற்​றுப்​பயணம் மிகப்​பெரும் மாற்​றத்தை ஏற்​படுத்​தும். 2026 தேர்​தலில் அதி​முக வென்​று, பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைப்​போம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *