
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில், முதல்வர் பதவிக்கான முறையான பதவி உயர்வு பட்டியல் தயாரித்து 4 வாரங்களில் தகுதியானவர்களை முதல்வர்களாக நியமிக்க தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத் துறையில் அரசு உதவி மருத்துவராக பணியில் சேரும் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக இணை பேராசிரியராகவும், அதன்பிறகு 3 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் 4 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருந்தால் பேராசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பேராசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் அடுத்தக்கட்டமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக (டீன்) சிவில் மருத்துவ பட்டியலின்
பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.