
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சல் வழியே அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. சென்னை பசுமைவழி சாலை மற்றும் சேலத்தில் உள்ள அவரது வீடுகளுக்கு குண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது.