
திருப்புவனம்: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி மற்றும் சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸார், காவல் ஆய்வாளர், சிவகங்கை ஏடிஎஸ்பி உள்ளிட்டோரிடம் மதுரை மாவட்ட நீதிபதி நேற்று விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்தவர் அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பாக இவரை விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.