
சென்னை: கூட்டணி குறித்த தவெக தலைவர் விஜய் எடுத்துள்ள முடிவு குறித்து குறிப்பிடும்போது, “மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். இது விஜய்க்கான மறைமுக அழைப்பாகவே கருதப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். ஜெயலலிதாவும் அந்த வழியில் செயல்பட்டு தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியைத் தந்தார். தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தது முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிதான். அதனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது.