• July 5, 2025
  • NewsEditor
  • 0

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு, பக்தர்கள் கவனிக்க, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு, வரும் 7.7.2025- திங்கட்கிழமை காலையில் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் குடமுழுக்கினை  காண்பதற்கு காவல் துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு பிரகாரம் வழியாக செல்ல அனுமதி கிடையாது

மேற்கு பிரகாரமானது யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகம் சம்மந்தமான பூஜைகள் நடைபெரும் முக்கிய பகுதி ஆகும். எனவே பக்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக வருவதை தவிர்க்கவும்.

திருச்ச்செந்தூர் கோயில்

கூட்ட நெரிசலை தவிர்க்க

கோயில் பிரகாரங்கள், வசந்த மண்டபம் அருகில் மற்றும் கோவில் அருகில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இடவசதிக்கு ஏற்ப போதுமான பத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

கும்பாபிஷேகம் ராஜகோபுர தரிசனம்

ராஜகோபுரத்தை பார்த்து (ராஜகோபுரம் தெரியும் இடங்கள்) கும்பாபிஷேக தரிசனம் செய்யும் இடங்கள்: 

கோயில் கடற்கரை பகுதியில் (Sea shore) ராஜகோபுரம் தெளிவாக காணலாம். மேலும் கீழ்கண்ட இடங்களில் இருந்து ராஜகோபுரத்தை கண்டு கும்பாபிஷேகத்தை காணலாம்.

மேலும் தூத்துக்குடி ரோடு JJ நகர் பார்க்கிங், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி பைரவர் கோவில் அருகில், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி தாய் Resort பின்புறம், நாழிகிணறு பழைய பேருந்து நிலையம் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, ஆலயம் D பிளாக் மற்றும் ஆலயம் H பிளாக் முன்பு, சண்முகர் விடுதி ஆகிய இடங்களிலும் காணலாம்.

மேலும் இவ்விடங்களில் கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காணலாம்.

ராஜகோபுரம்

பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும் வழி:

பகத்சிங் பேருந்து நிலைய வாகன நிறுத்தம், மாட்டுத்தாவணி வாகன நிறுத்தம், TB ரோடு ஐடியல் பார்க்கிங் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் TB ரோடு, மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், கோவில் வடக்கு ஆர்ச் வழியாக கோவில் வடக்கு பகுதிக்கு (யாகசாலை, ராஜகோபுரம்) இடவசதிக்கேற்ப போதுமான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்களில் கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் மாற்றுப்பாதையில் கோவில் மற்றும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

JJ நகர் பார்க்கிங் மற்றும் TB ரோடு வழியாக வரும் பக்தர்கள், தாலுகா அலுவலகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம், மினிசிவமுருகன் லாட்ஜ் ஜங்ஷன் (நாடார் தெரு), சன்னதி தெரு (சுபா மெடிக்கல் ஜங்ஷன்), சன்னதி தெரு (புளியடி சந்தனமாரியம்மன் கோவில் ஜங்ஷன்), புளியடியம்மன் கோவில் தெரு, சபாபதி பிள்ளையார் கோவில் (நவாப்பழ சாலை), நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். 

தூத்துக்குடி ரோடு வழியாக வரும் பக்தர்கள், பகத்சிங் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். திருநெல்வேலி ரோடு வழியாக வரும் பக்தர்கள், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.

சுவாமி சண்முகர்

பரமன்குறிச்சி ரோடு மற்றும்குலசேகரபட்டினம் ரோடு வழியாக வரும் பக்தர்கள், முருகாமடம் (தெப்பகுளம்), முத்தாரம்மன்கோவில் தெரு ஜங்ஷன், தெற்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். கிழக்கு ரதவீதி மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து சன்னதி தெரு வழியாக பக்தர்கள் கோவில் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.

பக்தர்கள் வெளியே நடந்து வரும் வழி:

 கோயில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், TB ரோடு வழியாக JJ நகர் பார்க்கிங் அல்லது TB ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு அல்லது பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு மற்றும் மற்றப்பகுதிகளுக்கு செல்லவும். 

கோயில் சன்னதி தெரு (கோவில் மத்திய பகுதி) வழியாக வெளியே வரும் பக்தர்கள் தேரடி (கிழக்கு ரதவீதி) வந்து கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச், மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேவலி ரோடு செல்லலாம். அல்லது தேரடி (கிழக்கு ரதவீதி) கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகும்) வழியாக பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும்.

கோயில் தெற்கு பகுதி (கடற்கரை, நாழிகிணறு) பகுதிகளில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வந்து பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். அல்லது முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன் வந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி இரும்பு ஆர்ச் ஜங்ஷன் வழியாக மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு செல்லவும்.

திருச்ச்செந்தூர் கோயில் கடற்கரை

கடற்கரை பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் (தேவைப்படும் பட்சத்தில்) நாழிகிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை Quarters, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை- முருகாமடம் அருகில்) செல்லவும். அல்லது கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை- முருகாமடம் அருகில்) செல்லவும்.

 தரிசனம் சம்மந்தமான அறிவிப்பு:

 மேலும் கும்பாபிஷேகம் முடிந்த உடன் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெறயிருப்பதால் 7.7.2025 அன்று பகலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்த உடன் பத்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அன்னதானம் கொடுக்கப்படும் இடங்கள்:

 1. TB ரோடு: செந்திலாண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

 2. தூத்துக்குடி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் (ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம் & JJ நகர் பார்க்கிங்.

 3. திருநெல்வேலி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் ரூ வியாபாரிகள் சங்க பார்க்கிங் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்.)

 4. பரமன்குறிச்சி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் & FCI குடோன் அருகிலுள்ள பார்க்கிங் (சர்வோதயா அருகில்).

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *