
புதுச்சேரி:புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் கட்டியதில் ஆட்சியாளர்கள் இமாலய ஊழல் புரிந்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி ஊழல் செய்தவர்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்டது.